ADDED : மார் 08, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் செந்தில் கண்டன உரையாற்றினர்.
சாகுபடி நில பட்டதாரர்களுக்கு மட்டுமே மானியம், கடன், நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டம்; அரசின் திட்டங்கள் மற்றும் நிதி உதவியை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குதல்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.