ADDED : மே 12, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: மாத்துாரில் மகளைக் காணவில்லை என போலீசில், தந்தை புகார் அளித்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துாரைச் சேர்ந்தவர் முனியப்பிள்ளை மகள் வனிதா, 17; பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார். இதனை அவரது தாய் ராதா கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த வனிதா, கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முனியப்பிள்ளை அளித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.