ADDED : ஆக 30, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்,: சங்கராபுரம் அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்தார்.
சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் பிரபாவதி, 23. இவர் எம்.சி.ஏ., படித்து விட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வந்தார்.
நேற்று கள்ளக்குறிச்சி சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.