ADDED : பிப் 28, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்,; சங்கராபுரம் அருகே மகள் கடத்தப்பட்டதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது, 17 வயது மகள் மூரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல, பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மகளை கடத்திச் சென்றதாக அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.