/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீயணைப்பு துறை ஒத்திகை நிகழ்ச்சி
/
தீயணைப்பு துறை ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : ஜூன் 13, 2024 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : தென்மேற்கு பருவ மழை தொடர்பாக பொது மக்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம் தீயணைப்பு துறை சார்பில் பூட்டை ஏரியில் பருவ மழையின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் சிக்குபவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு அலுவலர் சிவகுமார் தலைமையில் நடந்த ஒத்திகை நிக்ச்சியில் பொது மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.