ADDED : ஆக 26, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மீன்பிடி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், 44; மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ராணி, 35; இருவரும் மங்களூருவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர். அய்யப்பன் அடிக்கடி மது குடித்துவிட்டு, ராணியுடன் தகராறு செய்வது வழக்கம்.
கடந்த 24 ம் தேதி போதையில் மனைவிடம் தகராறு செய்துவிட்டு பானையங்கால் வந்தவர், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.