/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெரியார் நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ளப் பெருக்கு
/
பெரியார் நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ளப் பெருக்கு
பெரியார் நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ளப் பெருக்கு
பெரியார் நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ளப் பெருக்கு
ADDED : மே 17, 2024 10:45 PM

கச்சிராயபாளையம்; கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்வராயன்மலையில் பெரியார், கவியம், மேகம், சிறுகலுார் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளைக் காணவும், குளித்து மகிழவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கல்வராயன்மலைக்கு வருவது வழக்கம். குறிப்பாக கோடை காலத்தில் அதிகளவில் வருவர்.
ஆனால், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், கோடை காலம் துவங்கும் முன்னரே கல்வராயன்மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் நீர்வீழ்ச்சிகள் முற்றிலும் வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு கல்வராயன்மலைப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள அருவிகளில் நீர் வரத்து ஏற்பட்டு, பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வர துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

