sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விநாயகர் ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு; உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு

/

விநாயகர் ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு; உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு

விநாயகர் ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு; உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு

விநாயகர் ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு; உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு


ADDED : செப் 10, 2024 12:06 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

உளுந்துார்பேட்டை தாலுகா கிழக்கு மருதுாரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலை காலனி பகுதியில் இருந்து ஊர் பகுதி வழியாக சென்றபோது, வேப்ப மரக்கிளையில் மோதி உடைந்து சேதமடைந்தது.

இதனால் ஊர் பகுதி மக்கள் தான் சிலையை சேதப்படுத்தினர் என கருதி சத்தம் எழுப்பினர். இதனால் அங்கே இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் திருநாவலுார் போலீசார் விரைந்து சென்று தரப்பினரையும் கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஆவேசமடைந்த ஒரு தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 5:20 மணியளவில் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, சிலைகள் ஊர்வலமாக கடலுார் கடலில் கரைப்பதற்காக புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us