sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நகராட்சி மின் மயானத்தில் மலைபோல் குப்பைக் குவியல்

/

நகராட்சி மின் மயானத்தில் மலைபோல் குப்பைக் குவியல்

நகராட்சி மின் மயானத்தில் மலைபோல் குப்பைக் குவியல்

நகராட்சி மின் மயானத்தில் மலைபோல் குப்பைக் குவியல்


ADDED : மே 13, 2024 06:12 AM

Google News

ADDED : மே 13, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் மயானத்தில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில், சேகரிக்கப்படும் குப்பைகள் தியாகதுருகம் சாலையில் கோமுகி ஆற்றின் அருகே கொட்டப்பட்டு வந்தது. அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக திடக்கழிவு மேலாண்மை துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மின் மயான வளாகத்தில் பசுமை உரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்காக நகராட்சியின் 21 வார்டுகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து துாய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படுகிறது. அதில் மக்கும் குப்பைகள் மூட்டையாக நகராட்சி மின் மயானத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நகராட்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மின் மயானத்திற்கு கொண்டு செல்லும் போது, மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பை மூட்டைகளால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

மேலும், மழை பெய்யும் போது சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இதனால் மின் மயானத்திற்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நகராட்சி மின் மயானத்தில் கொட்டப்படும் குப்பை மூட்டைகளை, உடனடியாக அகற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, நகராட்சி மின் மயானத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பை மூட்டைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us