sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாங்கி கொண்டிருந்த கர்ப்பணியிடம் இரண்டு சவரன் செயின் பறிப்பு

/

துாங்கி கொண்டிருந்த கர்ப்பணியிடம் இரண்டு சவரன் செயின் பறிப்பு

துாங்கி கொண்டிருந்த கர்ப்பணியிடம் இரண்டு சவரன் செயின் பறிப்பு

துாங்கி கொண்டிருந்த கர்ப்பணியிடம் இரண்டு சவரன் செயின் பறிப்பு


ADDED : ஜூலை 07, 2024 04:34 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் இருந்து 2 சவரன் தாலி செயினை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகா ஆசனூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 30; பினாயில் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி, 25; இவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வீட்டின் வெளிப்புற கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அருண்குமாரின் தாய் தேவகி, தேவகியின் சின்னம்மா ராஜகுமாரி ஆகியோர் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டு இருந்தனர்.இதனை நோட்ட மிட்ட இரு மர்ம நபர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணவேணியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தாலி செயினை பறித்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி சத்தம் போடவே அருகில் படுத்திருந்த அருண்குமார் மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, மர்ம நபர்கள் அருண்குமாரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைககாக அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us