ADDED : மே 11, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் சிறுமியை காதலித்து அவரை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் காதலனை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் ஜனா, 21; இவர் 11ம் வகுப்பு மாணவியான 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 4ம் தேதி இரவு இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த சிறுமி, 5ம் தேதி மாலை துாக்கு போட்டுக் கொண்டார். உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து, சிறுமியை தற்கொலைக்கு துாண்டியதாக காதலன் ஜனாவை கைது செய்தனர்.