sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மரத்தின் மீது அரசு பஸ் மோதல்: 9 பேர் காயம்

/

மரத்தின் மீது அரசு பஸ் மோதல்: 9 பேர் காயம்

மரத்தின் மீது அரசு பஸ் மோதல்: 9 பேர் காயம்

மரத்தின் மீது அரசு பஸ் மோதல்: 9 பேர் காயம்


ADDED : ஜூலை 02, 2024 11:15 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வாணாபுரம் அருகே சாலையோர மரத்தின் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சையத் பாபு,51; அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று மதியம் 12:00 மணியளவில், அரசு பஸ்சில் திருக்கோவிலுாரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சங்கராபுரத்திற்கு புறப்பட்டார்.

வாணாபுரம் அடுத்த மரூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிர் திசையில் 'எம்-சாண்ட்' லோடுடன் வந்த லாரி, அரசு பஸ் மீது உரசியது. இதனால், பஸ்சை இடது பக்கமாக திருப்பிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பஸ்சில் பயணித்த ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமு மனைவி வள்ளி, 52; கடம்பூர் தேவராஜ் மனைவி ஜெயக்கொடி, 47; மெய்யூர் ராஜ்குமார், 19; விமலா,31; உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

இதில், ஜெயக்கொடி, வள்ளி ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் மற்றவர்கள் வாணாபுரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, 36; மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us