
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த சித்தலூர், பெரியநாயகி அம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த, பிப்.26,ம் தேதி துவங்கியது.
நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சர்வ அலங்காரத்தில் உற்சவர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து நேற்று மயான கொள்ளை திருவிழா நடந்தது.
இதில் அம்மன் காளி அலங்காரத்தில் எழுந்தருளி மணிமுக்தா ஆற்றை ஒட்டி உள்ள மயானத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து,
இன்று மாலை 4:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், போக்குவரத்து கழகம் சார்பில், கள்ளக்குறிச்சி மற்றும் தியாக துருகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.