/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது
/
15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது
ADDED : ஜூலை 21, 2024 07:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடு அருகே குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பகண்டை கூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூரியா மற்றும் போலீசார் அத்தியூர் - ஜம்பை சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகொள்ளியூர் பெட்ரோல் பங்க் அருகே மொபட்டில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர், சங்கராபுரத்தைச் சேர்ந்த பழனி, 55; என்பதும், தனது மளிகைக் கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா கொண்டு சென்றதும் தெரியவந்தது.
உடன், பழனியை கைது செய்து, அவரிடமிருந்து 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.