ADDED : ஏப் 28, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள பாபு, 52; என்பவர் குட்கா விற்றது தெரிந்தது.
இதனையடுத்து, பாபுவை கைது செய்து, கடையில் இருந்த 15 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

