ADDED : ஜூன் 25, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவல்லி மற்றும் போலீசார் நகர பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காட்டுகொட்டகை தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே, அகரக்கோட்டாலத்தை சேர்ந்த மகேந்திரன், 34; கள்ளக்குறிச்சி அக்ரஹாரதெருவைச் சேர்ந்த சரவணன், 40; ஆகியோர் குட்கா விற்றது தெரியவந்தது.உடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, மகேந்திரனை கைது செய்தனர். சரவணனை தேடி வருகின்றனர்.