ADDED : மே 30, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடு பகுதியில் குட்கா பொருட்கள் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
பகண்டை கூட்ரோடு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் பகண்டை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 42; தனது கடையில் குட்கா விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கோபாகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சண்முகம் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.