ADDED : மே 30, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையத்தில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி காயத்திரி, 27; இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
மணிகண்டன் தினமும் மது குடித்து வந்ததால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், காயத்ரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
கடந்த 23 ம் தேதி இரவு 11:30 மணிக்கு மணிகண்டன் தனது நண்பர்கள் சின்னப்பிள்ளை, கணபதி ஆகியோருடன் சென்று மனைவி காயத்ரியை தாக்கி 3 சவரன் பறித்துக் கொண்டதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் உட்பட 3 பர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.