sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவர் இரண்டாவது திருமணம் முதல் மனைவி போலீசில் புகார்

/

கணவர் இரண்டாவது திருமணம் முதல் மனைவி போலீசில் புகார்

கணவர் இரண்டாவது திருமணம் முதல் மனைவி போலீசில் புகார்

கணவர் இரண்டாவது திருமணம் முதல் மனைவி போலீசில் புகார்


ADDED : ஏப் 30, 2024 11:24 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே முதல் மனைவிக்கு தெரியாமல், இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ரூபா,30; இருவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் துபாய்க்கு சென்றார். இதனால் ரூபா அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்ததால் ரூபா கடந்த ஜனவரி மாதம் மாடூரில் உள்ள கணவர் வீட்டிற்குச் சென்றார். அங்கு, மணிகண்டன் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருப்பதை அறிந்து ரூபா அதிர்ச்சியடைந்தார்.

இதனை தட்டிக்கேட்ட ரூபாவை, மணிகண்டன் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us