sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நாள்தோறும் 'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால் வானத்தில் பறக்கும் பட்டம் போல் உயரலாம் ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேச்சு

/

நாள்தோறும் 'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால் வானத்தில் பறக்கும் பட்டம் போல் உயரலாம் ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேச்சு

நாள்தோறும் 'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால் வானத்தில் பறக்கும் பட்டம் போல் உயரலாம் ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேச்சு

நாள்தோறும் 'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால் வானத்தில் பறக்கும் பட்டம் போல் உயரலாம் ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேச்சு


ADDED : செப் 10, 2024 06:57 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: 'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால், வானத்தில் பறக்கும் பட்டம் போல் உயரலாம்' என ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேசினார்.

தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டியில் அவர் பேசியதாவது:

அப்துல்கலாம் தேசிய அளவில் சிறந்த ஆசிரியராக திகழ்ந்து இந்தியாவுக்கே ஊக்கமாக இருந்தார். அசாத்திய திறமைகளைக் கொண்ட மாணவர்களை பார்ப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளது.

மாணவர்களின் தற்போதைய காலகட்டம் முன்னேறும் காலகட்டமாகும். வாழ்க்கை என்பது எளிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் வரை முயற்சி, கூடுதல் முயற்சி, ஒப்பீடு, திறன் வெளிப்பாடு, கூடுதல் அனுபவம் ஆகியவை பெரிய தேவையாக இருந்தது.

ஆனால், தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் கிரியேஷன், கோ-ஆப்பரேஷன் இருந்தால் மட்டுமே மிகப்பெரிய அளவில் உயர முடியும். முந்தைய காலங்களில் டிராக்டர், கார், இரு சக்கர வாகனம் ஓட்டுவது பெரிய விஷயமாக பேசப்படும். யாராவது ஒரு பெண் இரு சக்கர வாகனம் ஓட்டினால் பெரிய விஷயமாக பேசப்பட்டது. ஆனால் தற்போது வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.

அதேபோல் அக்காலங்களில் ஓலைச்சுவடிகளில் அவ்வையார், திருவள்ளுவர் பல்வேறு பொக்கிஷங்களை எழுதி வைத்தனர். அதனை தற்போது டிஜிட்டல் உலகத்திற்கேற்ப ஆப்களில் மாற்றி கொண்டு வைத்திருக்கிறோம்.

தற்போது மாணவர்கள் திறமை கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது, அசாத்திய திறமை கொண்டவர்களாக உருவாக வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சாதிக்க முடியும்.

'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர்களுக்கான பொது அறிவை வளர்க்கும் பொருட்டு உங்களது கரங்களில் வழங்குகிறது. மாணவர்கள் தங்களது வகுப்பறை, பள்ளியில் மட்டும் முதலாவதாக வந்தால் போதாது. அதனையும் தாண்டி தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் மேலும் உயர 'தினமலர் - பட்டம்' இதழை தினமும் படித்து வானத்தில் பறக்கும் பட்டம் போல் நீங்களும் வாழ்க்கையில் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us