ADDED : செப் 09, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் கிரிராஜி முன்னிலை வகித்தார். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அருண்கென்னடி, நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுப்ரமணியம், நுகர்வோரின் உரிமைகள், நுகர்வோர் சட்டம் குறித்து பேசினர்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் முஸ்தபா, ரியாஸ்உசேன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் தேவிமயில் நன்றி கூறினார்.