/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : ஏப் 25, 2024 04:01 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்கறிச்சி லோக்சபா தொகுதிக்கட்பட்ட ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி), ஆத்துார் (தனி), ஏற்காடு (எஸ்.டி) ஆகிய சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைத்து தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்டாங் ரூம்கள் மற்றும் ஓட்டு எண்ணும் மையம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர், இரண்டாம் நிலையில் போலீசார் மற்றும் சி.சி.டி.வி., கேமிராக்கள் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

