/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உரிமமின்றி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை
/
உரிமமின்றி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை
உரிமமின்றி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை
உரிமமின்றி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை
ADDED : ஏப் 02, 2024 04:07 AM

கள்ளக்குறிச்சி : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் விதை விற்பனை உரிமமின்றி தனியார் நாற்றங்காலில் (நர்சரி) கன்றுகள் விற்பனை செய்யக்கூடாது என விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் கூறியதாவது:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் பழமரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றாங்காலில் விற்பனை செய்யப்படும் அனைத்து பழமரக்கன்றுகள், தென்னை நாற்றுகள், பணப்பயிர் மரக்கன்றுகளில் உண்மைத் தன்மை அட்டையை கட்டாயம் பொருத்த வேண்டும். உண்மைத் தன்மை அட்டையில் நாற்றங்கால் உரிமையாளரின் கையெழுத்தோடு விதைச் சட்டத்தின்படி முத்திரை எண், பயிர், ரகம், பதியம் செய்த நாள், குவியல் அல்லது கன்று எண், நாற்றங்கால் விலாசம், உற்பத்தியாளர் பெயர், முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்.
குழித்தட்டுகளில் விற்பனை செய்யும் காய்கறி பயிர்களின் நாற்றுகளின் தரம், ஆதாரத்தை உறுதி செய்ய குழித்தட்டுகளில் ரகம், வீரிய ரகங்களின் விதை குறித்த தகவல்களை உள்ளடக்கிய உண்மை தன்மை அட்டை பொருத்தி விற்பனை செய்ய வேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றி தரமான பழமரக்கன்றுகள், குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யும் காய்கறி நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்க ஆவணம் செய்யப்பட வேண்டும்.
விற்கப்படும் கன்றுகள், காய்கறி நாற்றுகளுக்கு விற்பனை ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். அனைத்து நாற்றங்கால் உற்பத்தியாளர்களும், விதை விற்பனை உரிமம் பெற்று விதைச் சட்டங்களை கடைபிடித்து விற்பனை செய்ய வேண்டும்.
விதை விற்பனை உரிமம் மற்றும் இது தொடர்பான தகவல்களை விழுப்புரத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நடைமுறைகளை பின்பற்றாத நாற்றங்கால் உரிமையாளர்கள் மீது விதைச் சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

