sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

/

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்


ADDED : ஆக 21, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 21, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் 25 ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்திட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், முதல்வர் கோப்பை போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் செப்.,- அக்., மாதங்களில் நடத்தப்படுகிறது.

மாவட்ட அளவிலான வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசு ஏற்பாடு, விநியோகம் போன்றவை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களிடம் ஆலோசனை செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

முதல்வர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க விரும்புவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in - வரும் 25ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்படும்.

இதில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகள் பெற இயலும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள முதல்வர் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து தேசிய அளவிலான தேக்வாண்டா விளையாட்டு போட்டியில் தங்கபதக்கம் பெற்ற அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி நக்ஷத்ராவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் (பொ) நேரு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us