நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.
நிகழ்ச்சியில், வார்டு வாரியாக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் குமரகுரு வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில், ாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, கவுன்சிலர்கள் சத்யாகுட்டி, விமலா உட்பட பலர் பங்கேற் றனர்.