/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 21ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
/
கள்ளக்குறிச்சியில் 21ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 18, 2024 11:58 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் 21ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் தமிழகத்தை சார்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு சில்லரை விற்பனை துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்கின்றனர். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.
முகாமில் மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ பி.இ., பி.டெக்., முடித்த பட்டதாரி ஆண்கள், பெண்கள் பங்கேற்று பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.