/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர்கள் விற்பனை; கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை
/
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர்கள் விற்பனை; கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர்கள் விற்பனை; கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர்கள் விற்பனை; கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை
ADDED : பிப் 24, 2025 01:12 AM
கள்ளக்குறிச்சி; மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர்களை விற்கும் சங்கங்கள், ஏஜன்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கலெக்டர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்த செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், 18 வயதுக்கு மேற்பட்ட கால்கள் பாதிக்கப்பட்டு கல்வி பயிலும், பணிக்கு செல்லும், சுய தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கடந்த, 2021 முதல் 2024ம் ஆண்டு வரை, 802 பேருக்கு, இந்த வாகனங்கள் வழங்கப்பட்டன.
நடப்பாண்டில், 300 வாகனங்கள் தேர்வுக்குழுவால் வழங்கப்படுகிறது.இந்நிலையில், மாற்றுத்திறனாளிளுக்கு வழங்கப்படும், பெட்ரோல் ஸ்கூட்டர்களில் இணைப்பு சக்கரங்களை நீக்கிவிட்டு, மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள் பயன்படுத்துவதாகவும், அரசு இலவசமாக வழங்கிய வாகனங்களை மாற்றுத்திறனாளிகளே விற்பதாகவும் புகார்கள் வந்துள்ளது.
மேலும் சங்கங்கள் பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வாகனங்களை, வாங்கி தருவதாக கூறி, ஏஜன்ட்டுகள் பணம் பெற்று ஏமாற்றுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் சங்கங்கள், ஏஜன்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள், வாகனங்களுக்கு பணம் கேட்பவர்கள் குறித்து, மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலக எண்ணில், 04151-294600; புகார் அளிக்கலாம்.
ஏஜன்ட்டுகளிடம் ஏமாறாமல், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை அணுகி இலவசமாக வாகனங்களை பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

