sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: வி.சி., மாவட்ட செயலாளர் ஆஜர்

/

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: வி.சி., மாவட்ட செயலாளர் ஆஜர்

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: வி.சி., மாவட்ட செயலாளர் ஆஜர்

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: வி.சி., மாவட்ட செயலாளர் ஆஜர்


ADDED : ஜூலை 01, 2024 06:45 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில், கோர்ட் உத்தரவின்பேரில், கடலுார் வி.சி., கட்சி மாவட்ட செயலாளர், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முன் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி, 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதை கண்டித்து, அதே ஆண்டு ஜூலை 17ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டம், கலவரமாக மாறியது. பள்ளி பஸ்களை தீயிட்டு எரித்து பொருட்கள் உடைத்து சூறையாடப்பட்டது.

மாணவி இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. பள்ளியில் நடந்த கலவரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 519 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். 166 பேரின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கலவரம் நடந்த வழக்கு விசாரணையை, வேறு புலன்விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணை கடந்த 27ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது, வாட்ஸ் ஆப் குழு மூலமாக கூட்டம் கூட்டிய திராவிட மணி மற்றும் உயிரிழந்த மாணவியின் தாய் செல்வியை இதுவரை காவல் துறையினர் விசாரிக்கவில்லை என பள்ளி தாளாளர் ரவிக்குமார் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, இருவரையும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்பேரில், உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி மற்றும் திராவிட மணி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து, வி.சி., கட்சி கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி, 50க்கும் மேற்பட்ட கட்சியினருடன் நேற்று காலை விசாரணைக்கு ஆஜராக கள்ளக்குறிச்சிக்கு வந்தார். டி.எஸ்.பி., அம்மாதுரை, காலை 11:00 மணி முதல் 12:30 வரையில், ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.






      Dinamalar
      Follow us