sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கனியாமூர் மாணவி இறப்பு வழக்கு ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

/

கனியாமூர் மாணவி இறப்பு வழக்கு ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கனியாமூர் மாணவி இறப்பு வழக்கு ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கனியாமூர் மாணவி இறப்பு வழக்கு ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : மே 28, 2024 09:06 PM

Google News

ADDED : மே 28, 2024 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:கனியாமூர் பள்ளி மாணவி இறப்பு வழக்கில், இயங்காத சி.சி.டி.வி.,யை தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆராய்ந்து முழு விபரத்தை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, கடந்தாண்டு மே 15ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆசிரியர்கள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை வழக்கில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி தாளாளர், செயலாளர் உள்ளிட்ட 14 பேரின் போன்கால் விபரங்கள், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சமர்ப்பித்த சி.சி.டி.வி., காட்சிகளில், சரியாக இயங்காத 26 கோப்புகளை மீண்டும் தர வேண்டி சிறுமியின் தாய் செல்வி மனு அளித்தார்.

இவ்வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜராகினார். அப்போது நீதிபதி ஸ்ரீராம், சரியாக இயங்காத சி.சி.டி.வி., காட்சிகளை தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆராய்ந்து சான்றுடன் கூடிய முழு விபரம், முதல் தகவல் அறிக்கை, போலீஸ் ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் ஜி.டி., விபரம் ஆகியவற்றை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us