sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஆளுங்கட்சியினருக்கு சிக்கல்

/

கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஆளுங்கட்சியினருக்கு சிக்கல்

கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஆளுங்கட்சியினருக்கு சிக்கல்

கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஆளுங்கட்சியினருக்கு சிக்கல்


ADDED : ஏப் 10, 2024 02:06 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை ஆளுங்கட்சியினருக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால், மாவட்டத்தில் உள்ள 80 சதவீத நீர்நிலைகள் நிரம்பவில்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர வழியின்றி போனது.

கடந்த ஒரு மாதமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஏரி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் முற்றிலுமாக வற்றியதால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.

நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் குடிநீர் சப்ளை செய்யும் போர்கள் வறண்டதால், மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது. குடிநீர் கிடைக்காத விரக்தியில், பாதிக்கப்பட்ட கிராமங்களில் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினருக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us