sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

/

திருக்கோவிலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 09, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : மத்திய அரசின் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, திருக்கோவிலுார் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் மாற்றப்பட்டு, பாரதிய நியாய சங்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷாசன்ஹித், பாரதிய சாக் ஷியா சட்டம் என்ற மூன்று புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சந்தப்பேட்டை அஞ்சல் துறை அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு அமைப்பு துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் ராஜபாண்டியன், செல்வராஜ், ராமதாஸ், வீரச்சந்திரன், மூர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேசினர். இதில் வழக்கறிஞர்கள் பலரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us