/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தடுப்பு காவலில் சாராய வியாபாரி கைது
/
தடுப்பு காவலில் சாராய வியாபாரி கைது
ADDED : ஆக 31, 2024 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை, மான்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ், 38; சாராய வியாபாரி. இவர் மீது கரியாலுார் போலீஸ் ஸ்டேஷனில் சாராய வழக்குகள் உள்ளது.
கடந்த ஜூலை 12ம் தேதி வீட்டின் பின்புறம் சாராயம் விற்றபோது தங்கராஜை போலீசார் கைது செய்தனர்.
இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் பிரசாந்த், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தங்கராஜை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள தங்கராஜியிடம் அதற்கான ஆணை வழங்கப்பட்டது.