ADDED : ஆக 05, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல், 51; என்பவர் சாராயம் விற்றது தெரிந்தது. இதனையடுத்து ஞானவேலை கைது செய்து அவரிடமிருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.