/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்
ADDED : மே 02, 2024 06:25 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவோணத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
ஆதியும் அந்தமும் அருட்பெரும் ஜோதியான சிவபெருமானின் அவதாரத்தில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். சிவபெருமானுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் ஒன்று தான் சித்திரை திருவோண நட்சத்திரம்.
இதனையடுத்து திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு முருகர் சன்னதியில் உள்ள சபையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்ஜாசன பூஜை, பஞ்ஜாவரன பூஜை, வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், நடராஜர் சபையில் மகா தீபாராதனை நடந்தது.
இந்நிகழ்ச்சியில்
பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டனர்.

