sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணலுார்பேட்டை பேரூராட்சியில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு

/

மணலுார்பேட்டை பேரூராட்சியில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு

மணலுார்பேட்டை பேரூராட்சியில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு

மணலுார்பேட்டை பேரூராட்சியில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு


ADDED : செப் 11, 2024 11:10 PM

Google News

ADDED : செப் 11, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில் கால்நடை மருந்தகம் அருகே புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் பிரசாந்த் நேற்று மணலுார்பேட்டை பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணி திட்டங்களை நேரில் ஆய்வு செய்தார். ரூ. 39 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு செய்யப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கட்டுமான பணியை பார்வையிட்டார்.

தொடர்ந்து கால்நடை மருந்தகம் எதிரில் ரூபாய் 1.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியை ஆய்வு செய்தார்.

நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் ரூ. 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமான பணி, பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமானங்களை பார்வையிட்டார்.

ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us