sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசம்பட்டில் 13 ஆண்டிற்கு பிறகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

/

அரசம்பட்டில் 13 ஆண்டிற்கு பிறகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

அரசம்பட்டில் 13 ஆண்டிற்கு பிறகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

அரசம்பட்டில் 13 ஆண்டிற்கு பிறகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா


ADDED : செப் 15, 2024 06:43 AM

Google News

ADDED : செப் 15, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: அரசம்பட்டில் 13 ஆண்டிற்கு பிறகு நேற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக தேர் திருவிழா நடக்க வில்லை.

இந்நிலையில் ஊராட்சி தலைவர் தரப்பினர் தேர் திருவிழா நடத்த தீர்மானித்து நோட்டீஸ் அடித்து நேற்று தேர் திருவிழா நடத்த ஏற்பாடு செய்து வந்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உயர்நீதிமன்றம் ஊரில் உள்ள 15 வார்டு உறுப்பினர்களை கொண்டு அமைதியான முறையில் தேர் திருவிழா நடத்த வேண்டும் என, உத்தரவிட்டது.

இதையொட்டி நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசன திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

மாலை 4:00 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளசெய்து தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் உட்பட 250க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us