ADDED : பிப் 28, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஸ்கூட்டர் மீது பைக் மோதியதில் மெக்கானிக் இறந்தார்.
கள்ளக்குறிச்சி, கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 60; மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் சென்றார்.
அப்போது, அந்த வழியாக கள்ளக்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்த முனிராம்சிங் மகன் ஆகாஷ், 25; என்பவர் ஓட்டி வந்த பைக், ஸ்கூட்டர் மீது மோதியதில் படுகாயமடைந்த சுப்ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.