நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் இந்திரா நகர் பால விநாயகர், சக்தி மாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் பால்குடம் சுமந்து மூங்கில்பாடி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்றனர். கோவிலை வந்தடைந்ததும், அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி ஊர்வலம் நடந்தது.

