sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

/

தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்


ADDED : ஜூலை 14, 2024 04:15 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த தாகம்தீர்த்தாபுரம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் நேற்று மாலை சிறப்பு வகுப்பு முடிந்ததும், மாணவர்கள் வழக்கம்போல் பள்ளி பஸ்சில் வீடு திரும்பினர். 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் சென்ற பஸ், மாலை 6:15 மணியளவில் குரால் கூட்ரோட்டில் இருந்து சின்னசேலம் மார்க்கமாக வளையும் போது சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில், பஸ்சில் பயணித்த நந்தகுமார், 15; சிவதனுஸ்ரீ, 13; ஹர்ஷிதா, 13; மகேந்திரன், 15; உதயா உட்பட 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவ, மாணவிகளை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலெக்டர் பிரசாந்த் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை உள்ள மாணவர்களின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து, தொடர்ந்து கவனித்து சிகிச்சை அளிக்குமாறு கல்லுாரி முதல்வர் (பொ) நேருவுக்கு அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us