ADDED : ஜூன் 19, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மகள்களுடன் மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி சின்னபொண்ணு, 48; இவர்களது மூத்த மகன் ராஜா. இவரது மனைவி தமிழ்மொழி, 24. இவர்களுக்கு தேவஸ்ரீ, 3; மகி, 2, என, இரண்டு மகள்கள் உள்ளனர்.
ராஜா கடந்த ஆறு மாதங்களுக்கு முன், வெளிநாட்டிற்கு வேலை செய்ய சென்றார். தமிழ்மொழி, அவரது மகள்களை அழைத்துக் கொண்டு கடந்த 14ம் தேதி தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார்.
ஆனால் தமிழ்மொழி மகள்களுடன் அவரது தாய் வீட்டுக்கு செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சின்ன பொண்ணு அளித்த புகாரின் பேரில், வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.