ADDED : ஆக 08, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : அம்மாபேட்டை பகுதியில் கைக்குழந்தையுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி மனை ராஜேஸ்வரி 22, இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த 2 ம் தேதி காலை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.