/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
/
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
ADDED : பிப் 28, 2025 05:16 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 94 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
சிறுவங்கூர், கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.
எலும்பு முறிவு டாக்டர் தினேஷ்குமார், கண் டாக்டர் லோகநாயகி, மனநல டாக்டர் ஜெயசீலன், காது மூக்கு தொண்டை டாக்டர் கணேஷ்ராஜா, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், 120 மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து, தகுதி வாய்ந்த 94 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.