நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : பாதுார் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 10:30 மணியளவில் யாகம் வளர்க்கப்பட்டது. யாகத்தில் பால், தயிர், நெய், பழங்கள் மற்றும் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறக்கோரி எழுதிய வெற்றிலை, புடவைகள், வளையல்களை போட்டனர். தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடந்தது.
வழிபாட்டில், உளுந்துார்பேட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

