ADDED : பிப் 28, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்;கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார், நேற்று காலை கல்லாநத்தத்தில், சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வடக்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த ஞானவேல், 55; என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சோதனை விற்பனைக்காக, 2 லாரி டியூப்களில், 110 லிட்டர் சாராயம் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
அந்த சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் ஞானவேலை கைது செய்து செய்தனர்.