ADDED : மே 23, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : ஆடு மேய்த்தவர் மின்னல் தாக்கி இறந்தார்.
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளவண்டு மகன் சுரேஷ், 25; ஆட்டு பண்ணை வைத்துள்ள இவர் நேற்று மாலை கூத்தக்குடி ஏரியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மாலை 6:45 மணிக்கு திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கியதில் சுரேஷ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். வரஞ்சரம் போலீசார், சுரேஷ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

