sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வெளியூர் நபர்களுக்கு பட்டா கிராம மக்கள் சாலை மறியல்

/

வெளியூர் நபர்களுக்கு பட்டா கிராம மக்கள் சாலை மறியல்

வெளியூர் நபர்களுக்கு பட்டா கிராம மக்கள் சாலை மறியல்

வெளியூர் நபர்களுக்கு பட்டா கிராம மக்கள் சாலை மறியல்


ADDED : மே 02, 2024 12:18 AM

Google News

ADDED : மே 02, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வெளியூரைச் சேர்ந்த நபர்களுக்கு பட்டா வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்துார்பேட்டை தாலுகா நாச்சியார் பேட்டை பகுதியில் வீடு இல்லா ஆதிதிராவிடர்கள் 104 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அந்தப் பகுதியில் எஞ்சியிருந்த 40 செண்டு இடம் ஆதிராவிடர்களுக்கு பட்டா வழங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த 40 சென்ட் இடத்தை வெளியூர் நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சந்தானம்சக்திவேலை நேற்று முன்தினம் பட்டா வாங்கிய தரப்பினர் தாக்கினர்.

இதில் காயமடைந்த சந்தானம்சக்திவேல், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் வெளி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதை கண்டித்து விருத்தாசலம் சாலையில் நாச்சியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நேற்று காலை 11.30 மணியளவில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us