/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு
/
நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு
நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு
நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஆக 17, 2024 03:28 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே நிலத் தகராறில் பெண்ணை திட்டி தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் காட்டுகொட்டாய் சேர்ந்த விஜயகுமார் மனைவி செல்வி,48; அதே ஊரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர்களுக்குள் அரசு புறம்போக்கு நிலம் அனுபவம் செய்வதில், தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
கடந்த 15ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், அவரது மனைவி செல்லம்மாள், மகள் ரஞ்சிதா ஆகியோர் சேர்ந்து செல்வியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.