sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண் மர்ம சாவு போலீஸ் விசாரணை

/

பெண் மர்ம சாவு போலீஸ் விசாரணை

பெண் மர்ம சாவு போலீஸ் விசாரணை

பெண் மர்ம சாவு போலீஸ் விசாரணை


ADDED : மார் 06, 2025 02:13 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பெண் மர்மமான முறையில், இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசந்திரன். இவரது மனைவி ப்ரியா, 28; இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த, 2019,ல் வெளிநாட்டில் வேலை செய்து வந்த பூசந்திரன் அங்கேயே இறந்தார். இந்நிலையில் பிரியா குழந்தைகளுடன், மாமனார் செக்கடியான் மற்றும் மாமியார் அஞ்சலையுடன், அதையூர் கிராமத்திலேயே வசித்து வந்தார்.

கணவர் இறப்பு தொடர்பாக கிடைத்த, ரூ.23 லட்சம் பணத்தை பிரியா மற்றும் அவரது மாமனார் தரப்பினர் பகிர்ந்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு பிரியாவிடம் அவரது மாமனார், அந்த பணம் குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து தகராறு உண்டானது.

அப்போது திடீரென, உடல் நிலை பாதிக்கப்பட்ட பிரியா, கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது இறப்பிற்கான காரணம் குறித்து, எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us