/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 22, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் சத்யா, 22; தியாகதுருகம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 20ம் தேதி காலை 8:00 மணிக்கு வழக்கம் போல பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை.
முருகேசன் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.