/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
கள்ளக்குறிச்சியில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 14, 2024 03:41 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில், அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லரை விற்பனையை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.
நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கேற்ப பணியாட்களை தேர்வு செய்கின்றனர். மேலும் மருத்துவத்துறையில் நர்சிங், பார்மசி மற்றும் இதர மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பிரத்யேக வேலை வாய்ப்பு முகாமும் நடக்கிறது.
மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., - பி.டெக்., மருத்துவம் சார்ந் படிப்பு முடித்த ஆண்கள், பெண்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.